இஸ்லாமிய வரலாற்றில் தோன்றிய மாபெரும் சட்டவியல் அறிஞர்களில் ஒருவர் இமாம் ஷாஃபிஈ. உலகம் முழுக்க கோடிக்கணக்கான முஸ்லிம்கள் பின்பற்றும் ஷாஃபிஈ மத்ஹபின் நிறுவனர் அவர் என்பது அனைவரும் அறிந்ததே. அவர் கவிதையிலும் சிறந்தவர் என்பது பலரும் அறியாதது. அவருடைய தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளின் தமிழாக்கமே இத்தொகுப்பு. கவிநயம், மொழிவளம், அர்த்தச் செறிவு, எளிமை முதலிய பண்புகளைக் கொண்ட இக்கவிதைகள், ஏக காலத்தில் ரசனைக்கும் சிந்தைக்கும் அறவாழ்வுக்கும் விருந்தாய் அமைபவை. அறபியில் படிக்குந்தோறும் பரவசமூட்டும் இக்கவிதைகளை, தமிழ் வாசகரும் ரசித்து இன்புறும் வகையில் மொழிபெயர்த்துத் தரப்பட்டுள்ளது. அவரின் கவிதைகள் பற்றிய சற்று விரிவான அறிமுகக் குறிப்பும் இதில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.