இந்நூல், திப்பு சுல்தான் தன் கைப்பட எழுதிவைத்த ஆவணத்தின் மொழிபெயர்ப்பு.தான் கண்ட முக்கியமான கனவுகளையும், அவற்றுள் சிலவற்றுக்குத் தன் வியாக்கியானங்களையும் ஃபார்சீயில் எழுதிவைத்திருக்கிறார்.
பதிவாகியுள்ள கனவுகளில் பலவும், அவருக்கும் ஆங்கிலேயருக்கும் எதிரான போர்களைப் பற்றியவையாகவே இருக்கின்றன.திப்பு விழிப்பில் மட்டுமல்ல, உறக்கத்திலும் போராளியாகவே வாழ்ந்திருக்கிறார் எனத் தெரிகிறது.அவருடைய ஆன்மிகப் பக்கமும் சுவாரஸ்யமான முறையில் வெளிப்பட்டுள்ளது.திப்பு சுல்தானின் ஆளுமையை விளங்கிக்கொள்வதில் இந்நூல் தவிர்க்க முடியாத பங்காற்றும்.