உடல் நோயுறுவதைப் போலவே உள்ளமும் நோயுறுகிறது. அதைக் கவனியாது விடின் அது நம்மை அழிவில் ஆழ்த்திவிடும். உள்ளத்தின் நோய்களையும், அவற்றைக் குணப்படுத்தும் நிவாரணங்களையும் திருக்குர்ஆன், நபிவழி என்பவற்றின் ஒளியில் இலகுவாக விளக்கும் இப்னு தைமிய்யாவின் சிறுநூல் இது. உள்ளத்தின் வகைகளைப் புரிந்துகொள்வது பற்றிய இப்னுல் கய்யிமின் ஆக்கமொன்றும் பின்னிணைப்பாகத் தரப்பட்டுள்ளது.