கருந்துளை, குவாண்டம் சித்தாந்தம் போன்ற ஆழமான நவீன அறிவியலின் ஆய்வுப் போக்குகளை அறிந்துகொள்ள இந்த நூலை வாசிப்பது அவசியம்.
எளிய நடை, புரியும்படியான விளக்கம், சுவையான கேள்விகள்...
தொடங்கினால் முடிக்கும்வரை நூலைக் கீழே வைக்க முடியாது. படிக்கப் படிக்க ஆர்வம் மேலிடும். அந்த அளவுக்கு நம்மை ஈர்த்து நூலின் செய்திகளோடு நம்மைக் கொண்டுசெல்லும் அற்புத மொழி நடை. அழகுணர்ச்சியோடு கட்டுரைகளை அமைத்திருப்பது ஆசையின் தனித்திறன்.
- த.வி. வெங்கடேஸ்வரன்