இந்தியாவில் ஜனநாயகம் நிலைத்திருப்பதற்கு மகத்தான பங்களிப்பை அளித்துவரும் முஸ்லிம்கள், அரசியலின் அனைத்து மட்டங்களிலும் மிகக் குறைவான பிரதிநிதித்துவத்தை மட்டுமே பெற்றுள்ளனர். நாடாளுமன்றத்திலும் மாநிலச் சட்டமன்றங்களிலும் அவர்களின் குறை-பிரதிநிதித்துவத்திற்கான முதன்மைக் காரணங்களாக பிரதான தேசிய/பிராந்தியக் கட்சிகளால் தேர்தலில் குறைவான எண்ணிக்கையில் நிறுத்தப்படுவது, பட்டியல் சாதி அந்தஸ்து மறுப்பு, முஸ்லிம் பெரும்பான்மைத் தொகுதிகள் பட்டியல் சாதியினருக்கு ஒதுக்கப்பட்டிருப்பது, முஸ்லிம்கள் அதிகமுள்ள தொகுதிகளில் ஏக சமயத்தில் பல முஸ்லிம் வேட்பாளர்கள் போட்டியிடுவது, பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருடன் சாத்தியமானவொரு அரசியல் கூட்டணியை உருவாக்காதிருப்பது உள்ளிட்டவற்றைக் குறிப்பிட்டு விரிவாகப் பகுப்பாய்வு செய்கிறது இந்நூல். முஸ்லிம் வாக்குகளால் செழிக்கும் மதச்சார்பற்ற கட்சிகளின் அணுகுமுறையில் பாஜகவின் எழுச்சி ஏற்படுத்தியிருக்கும் எதிர்மறைத் தாக்கம் குறித்து விவாதிப்பதுடன், விகிதாச்சாரப் பிரதிநிதித்துவத்தைப் பெறுவதற்கு முஸ்லிம்கள் கடைப்பிடிக்க வேண்டிய உத்திகளைத் தீர ஆராய்ந்து, சமத்துவமின்மையை ஒழிக்கும் வகையில் அனைவரையும் உள்ளடக்கியவோர் அரசியல் மற்றும் சமூக ஜனநாயகத்திற்காக நூல் வலுவாக வாதிடுகிறது.