உயர்சாதிக் கேரளத்திற்கு எதிராகச் சமரசமின்றிப் போராடும் பிரபாகரன், தலித் பகுஜன்-பிற்படுத்தப்பட்ட சிறுபான்மையினரின் அரசியல் வரலாற்றில் தனித்துவமான ஓர் இடத்தைப் பெற்றவர்.
அந்தப் போராட்டப் பயணத்தில் தன் வாழ்க்கை நெறியாக இஸ்லாத்தை ஏற்று, ஷம்சுத்தீனாக மாறி, தொடர்ந்து அம்பேத்கரியப் பாதையில் நடப்பவர். கன்ஷிராம், அருந்ததி ராய், வி.டி. ராஜசேகர் ஆகியோருடன் நெருக்கமானவர்.
இந்நூல், அவரின் அரசியல் வாழ்க்கையையும் சமூக தொடர்புகளையும் விரிவாகப் பதிவுசெய்கிறது. கேரள வரலாற்றில் பிற்படுத்தப்பட்டவர்களின் நினைவுகளில் மற்றொரு அத்தியாயத்தைத் திறந்துவைக்கும் நினைவுக் குறிப்புகள் இவை.