மாபெரும் ஸூஃபி ஞானியான இப்னு அறபியின் நுட்பமும் சிடுக்குமான உலக நோக்கை இலகுவான கையடக்க வடிவில் காட்டுகின்ற நூல் இது. பலரும் சொல்வதுபோல், இப்னு அறபீயின் அடிக்கருத்தியல் 'வஹ்தத்துல் வுஜுது' (ஏகத்துவ உள்ளமை) அல்ல. மாறாக, மனிதப் பூரணத்துவமே அவரின் அடிக்கருத்தியலாக இருந்துள்ளது என்பது இந்நூலை வாசிக்கையில் விளங்கும். இப்னு அறபியியலில் இயங்கிவரும் தன்னிகரற்ற அறிஞர்களில் ஒருவரி டமிருந்து நம்பகமான முறையில் அவரை அறிய உதவும் ஓர் கையேடு.