காலத்தில் நிலைநின்றுவிட்ட உலக கிளாசிக்குகளில் ஒன்று ஹெர்மன் ஹெஸ்ஸேவின் சித்தார்த்தன். துறவு, அறிவு, இன்பம், காதல், துக்கம் ஆகியவற்றின் வழியே ஞானத்தை, விடுதலையைத் தேடியடையும் ஓர் மனிதனின் பரிணாமக் கதை. இன்று இந்நூலின் பல பதிப்புகள் தமிழில் கிடைத்துவரும் நிலையில் நூலாசிரியர், நூலின் பின்னணி, அதன் பதிப்புகள் ஆகியவை பற்றிய விரிவான அறிமுகவுரையுடன் வெளிவரும் செம்பதிப்பு இது.