இந்நூல், ஸூஃபித்துவம் என்னும் இஸ்லாமிய ஆன்மிகத்தின் கோட்பாட்டு நூலாகக் கருதப்படும் ‘ரிசாலத்துல் குஷைரிய்யாவின்’ தமிழாக்கம் ஆகும். உலகப் புகழ் பெற்ற இமாம் கஸ்ஸாலியின் ‘இஹ்யாஃ உலூமித்தீன்’ நூலுக்கு இந்நூலே முன்னோடியாகக் கருதப்படுகிறது. மௌலானா ரூமி தனது மஸ்னவி காவியத்தில் குறிப்பிட்டிருக்கும் இந்நூல், ஸூஃபி வட்டங்களில் சாதகர்களால் பயிலப்படும் ஆன்மிக நூல்களில் முதன்மையான ஒன்றாகும். ஸூஃபிக் கோட்பாடுகளை ஒவ்வொன்றாக அறியவும் சிந்திக்கவுமான சாத்தியத்தை இந்நூல் வழங்குகிறது.