இது ஸூஃபித்துவம் பற்றி ஒரு ஸூஃபியே எழுதிய நூல். “ஸூஃபித்துவம் என்பது ஒரு கரையற்ற பெருங்கடல்” என்கிறார் அவர். இது ஸூஃபித்துவம் பற்றி அவர் தரும் கவித்துவமான வருணனை. அந்தக் கடலிலிருந்து அவள் அள்ளிய பல அரிய முத்துகளை இங்கே தஸ்பீஹ் மணிமாலை போல் கோர்த்து நமக்குத் தந்திருக்கிறார்.
“ஸூஃபித்துவம் என்பது இறைஞானம்” என்றும் அவர் சொல்கிறார். இது ஸூஃபித்துவம் பற்றி அவர் தரும் தெளிவான வரையறை. ‘மஅரிஃபத்துல்லாஹ்’ என்னும் அந்த உன்னதமான இறைஞானத்தை அடைய ஒருவர் நடக்க வேண்டிய பாதையை இந்நூலில் அவர் சுட்டிக் காட்டுகிறார்.